புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் கட்சி ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை, துணை நிலை ஆளுநர் உரையுடன் நாளை தொடங்க உள்ளது. முன்னதாக ஆகஸ்டு 26ந்தேதி  துணை சபாநாயர் பதவிக்கான தேர்தல்  நடைபெறும் எனவும், இன்று  (25ந்தேதி) வேட்புமனு தாக்கல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, இன்று துணைசபாநாயகர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. துணைசபாநாயகர் பதவிக்கு  என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால்,   ராஜவேலு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

ராஜவேலு புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக நாளை பதவியேற்கவுள்ளார்.