நியூயார்க்:  அமெரிக்காவில் நடைபெற உள்ள இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபனுக்கான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்-சுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, தனது விஷயத்தில் அதிபர் பைடன் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என ஜேகோவிச் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகின் நம்பா்1 டென்னிஸ் வீரரான  ஜோகோவிச் செர்பிய நாட்டைச் சேர்ந்தவர். இவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால் பல நாடுகள் அவர் வருவதை தடுத்து வருகின்றன.  உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 2020, 21  காலக்கட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. ஆனால்,. டென்னிஸ் வீரர் ஜேகோவிச், அதை கண்டுகொள்ளாமல், தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.

ஏற்கனவே கடந்த அண்டு  ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதற்காக மெல்போா்ன் வந்தபோது அவர் உள்ளே வர ஆஸ்திரேலியாக தடை விதித்து.   ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினா் அவரை விமான நிலையத்திலேயே  தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இது சர்ச்சையானது.

இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் நடைபெற உள்ள ‘ இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபனுக்கான போட்டிகளில் பங்கேற்க அவருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்த நோவக் ஜோகோவிச் தனது விஷயத்தில் அதிபர், ஜோ பிடன் தலையிட அழைப்பு விடுத்தார்

அமெரிக்காவில்  இண்டியன்வெல்ஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள்   வருகிற ( மார்ச்) 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும், 22-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரையும் நடக்கிறது.  இந்தப் போட்டிகளில் பங்கேற்க ஜோகோவிச்  அனுமதி கிடைக்காததால் ‘நம்பர் ஒன்’ வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான விலகி இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோகோவிச் தனக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர் இந்தப் போட்டியில் இருந்து பின்வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொள்ள மெல்போர்ன் சென்ற ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதேபோல் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியையும் அவர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் துபாய் ஓபன் டென்னிசில் அரையிறுதியில் தோற்ற போதிலும் ஜோகோவிச் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் முதலிடத்தில் இருப்பது இது 379-வது வாரமாகும். அதிக வாரங்கள் முதலிடத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.