சென்னை: ஆளுநருக்கு போஸ்டர் ஒட்ட, பேனர் வைக்க திமுகவினருக்கு தடை விதிக்கப்படுவதாகவும், சட்டப்பேரவையில், ஆளுநருக்கு எதிராக பேசக்கூடாது என்றும் திமுக எம்எல்ஏக்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகள், ஆளுநர் விவகாரம் உள்பட பல நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, எம்எல்ஏக்களுக்கு அறிவுரை கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, எம்எல்ஏக்களுக்கு பல அறிவுரை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி,  சட்டப்பேரவையில் திமுகவின் எம்எல்ஏக்கள் ஆளுநரை தாக்கிப் பேசக்கூடாது எனவும், ஆளுநருக்கு எதிராக பேனர்கள், போஸ்டர்கள்   அடிக்க வேண்டாம் எனவும் திமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.