சியோல்:
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரியா வட கொரிய விளையாட்டுத்துறை அமைச்சர் கிம் குக் தெரிவிக்கையில், ஜப்பானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் நாட்டு தடகள வீரர்களை கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.