சென்னை:
ர்நாடக அரசு பேருந்துகளில் உள்ளதுபோல் சென்னை மாநகர பேருந்துகளிலும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை விதிக்க போக்குவரத்து கழகம் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு, சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், பேருந்துகளில் பாடல் கேட்பது, சத்தமாக செல்போனில் பேசுவது, வீடியோ கேம் விளையாடுவது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், பேருந்தில் செல்லும் பயணிகள் சத்தமாக பாடல் கேட்பது, போனில் பேசுவதால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்றும் இதனால் கர்நாடக அரசு பேருந்துகளில் உள்ளதுபோல் சென்னை மாநகர பேருந்துகளிலும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். சமூக ஆர்வலர் மனுவை பரிசீலித்த சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.