சென்னை

சிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட இடங்களில் சில இடங்களில் ரெய்டுகள் நடைபெறவில்லை என சொல்லப்படுகிறது.

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், வழக்கறிஞர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.   மொத்தம் 1800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கு தினகரனும், அவரது ஆதரவாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவின் குடுமபத்தினர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரி சோதனைகள் நடைபெறவில்லை என செய்திகள் வந்துள்ளன.   சசிகலாவின் கணவர் நடராஜனின் பெசண்ட் நகர் இல்லத்தில் சோதனை நடைபெறவில்லை.   அவர் உடல்நலம் குன்றியுள்ளதால் சோதனைகள் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

அதே போல முன்பு சர்ச்சைக்குள்ளான சிறுதாவூர் பங்களா,  தஞ்சாவூரில் உள்ள நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனின் இல்லம்,  சென்னை எம் எம் டி ஏ காலனியில் உள்ள திருமண மண்டபம் ஆகிய இடங்களில் எந்த சோதனையும் நடைபெறவில்லை.  விளாரில் உள்ள நடராஜனின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.