புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில் புதிய பாதிப்புகள் பதிவாகவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய முழுவதும் நேற்று ஒரே நாளில்,  4,362  பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தாற்று பரவல் வெகுவாக குறைந்ததுள்ளது. இதுவரை இந்தியாவில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,67,315-ஆக உள்ளது. தடுப்பூசிகள் அதிக அளவு போடப்பட்டுள்ளதால் தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது.

இந்த  நிலையில் புதுச்சேரியில் ஒரு பாதிப்பு கூட புதிதாக பதிவாகவில்லை என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது புதுச்சேரியில் மொத்தமே 24 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில் புதிய பாதிப்புகள் இல்லாதது புதுச்சேரி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.