Skip to content
  • Mon. Jul 27th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தமிழ்நாட்டில் ‘குரங்கு அம்மை’ தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை! பொதுசுகாதாரத்துறை தகவல்

Aug 16, 2024
சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் M-Pox வைரஸ்  எனப்படும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் M-Pox (குரங்கு அம்மை) பரவியுள்ளது.  M-Pox எனப்படும் குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய்.   இந்த நோய்த் தொற்று விலங்குகளிடமே அதிக அளவில் பரவும் தன்மை கொண்டது. அந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.  இந்த நோய் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தள்ளது. இந்த நோயானாது, தற்போது கொரோனா தொற்று போல் தீவிரமாக பரவத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த நோயால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் நோய் பாதிப்பு காரணமாக இதுவரை  524 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து,  M-Pox வைரஸ்  எனப்படும் குரங்கு அம்மை குறித்து,   உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவிய குரங்கு அம்மை வைரஸின் (MPox) மாறுபட்ட திரிபு 13க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதையடுத்து, ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பைப் பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளன.  இந்த நிலையில், குரங்கு அம்மை  தொற்று பாதிப்பு ஆப்ரிக்க கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தள்ளது.

இந்த நிலையில், குரங்கு அம்மை தொற்று பாதிப்புகளை தடுக்கும் வகையில், இந்திய அரசு அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து,  தமிழ்நாட்டில் யாருக்கும் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,  இதுதொடர்பாக, தமிழக பொதுசுகாதாரத்துறை, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள விமான  நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Post navigation

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில் அமைச்சரவை சகாக்களுடன் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற மத்திய அரசுக்கு நன்றி! முதலமைச்சர் ஸ்டாலின்..

Related Post

தமிழ் நாடு

புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் 

தமிழ் நாடு

பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் வீடு, மனை வாங்க – விற்க தடை இல்லை… வதந்திகளை நம்ப வேண்டாம்: வனத்துறை விளக்கம்

சினி பிட்ஸ் தமிழ் நாடு

‘செக்’ மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு

உலகம்

இந்தியா உலகம்

60 நாடுகள் மீது இன்று முதல் புதிய இறக்குமதி வரி… அமெரிக்கா அறிவிப்பு

July 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer