சென்னை

மிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் இந்த மாதம் திறக்கப்பட உள்ளன.  சென்ற வருடத் தொடக்கத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. 

தற்போது கொரொனா பரவல் மீண்டும் அதிகரித்து வ்ருகிறது.  எனவே கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படமாட்டாது என ஊகங்கள் எழுந்தன.   இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் அள்ளிகள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார்.  மேலும் கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்வது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அர்சு முடிவு எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.