சென்னை: தலைவர் பதவிக்கு தகுதியற்றவர்; பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த அதிமுக மூத்த உறுப்பினர், ஜெயக்குமார் சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிர் பிடித்து ஆடும என்றும்,  அண்ணாமலையை அதிமுக தொண்டர்கள் இனிமேல்  தாறுமாறாக விமர்சிப்போம் என்றும் கூறினார்.

செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடியதாகவும் மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததாகவும் அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என்றும் கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக கடும் எதிர்ப்பை திவு செய்துள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தார்.   “கூட்டணிக் கட்சியை விமர்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றால் நிச்சயமாக எந்த அதிமுக தொண்டரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.  இதுபோல பேசக்கூடாத  பலமுறை பாஜக-வுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளோம்.

“தமிழ்நாட்டில் எங்களை வச்சி தான் உங்களுக்கு அடையாளம். இது என்னுடைய கருத்து இல்லை. கட்சியின் கருத்து.  தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும். பாஜக தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் வாக்கு வாங்கும்.

பி.ஜே.பி தலைவருக்கே லாயிக்கு இல்லாதவர் அண்ணாமலை. இனிமேல் அண்ணாமலை சிறுமை புத்தி பற்றி கிழி கிழினு கிழிப்போம். பெரியார் , அண்ணா , புரட்சி தலைவர் , புரட்சி தலைவியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.  பலமுறை பாஜக-வுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளோம்.  “கூட்டணிக் கட்சியை விமர்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றால் நிச்சயமாக எந்த அதிமுக தொண்டரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

அண்ணாமலை தன்னை முன்னிலைபடுத்திக்கொள்ள அந்தர் பல்டி அடிக்கிறார். அம்மா பற்றி பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு அண்ணா வரலாற்றை பற்றி பேசுகிறார். அறிஞர் அண்ணாவை சிறுமை படுத்திய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தோம். அடுத்து பெரியாரை இழிவு படுத்துகிறார். பெரியார் அடிவாங்குவதை சொல்வேன் என்கிறார். கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசுகிறார். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிர் பிடித்து ஆடும். அண்ணாமலைக்கு கொடுத்த பதவி தகுதிக்கு மீறிய பதவி.

பாஜக தலைவருக்கு லாயக்கு இல்லாதவர். அதிமுக சிங்க கூட்டத்தை பார்த்து சிறுநரி போல் அண்ணாமலை ஊலையிடுகிறார். தனித்து நின்றால் நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்குவாரா? பெரியாரைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. கூட்டணி கட்சியை விமர்சனம் செய்யும் அண்ணமலையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அண்ணாமலையை தாருமாறாக விமர்சனம் செய்வோம். சிருமை புத்தியை பற்றி சமூக வலைதளத்தில் பதிவிடுவோம். அண்ணாமலை செயலால் தேர்தலில் எப்படி கூட்டணி கட்சியினர் வேலை செய்வார்கள். அதிமுகவுடன் கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை. பாஜக தொண்டர்கள் விரும்புகிறர்கள்.

பாஜக கலூன்ற முடியாத நிலை இருந்தது. அதிமுகவை வைத்து தான் அடையாளம் கண்டார்கள். அதிமுக இனி பாஐகவுடன் கூட்டணி் இல்லை. அடுத்த முடிவு தேர்தல் வரும்போது தான் முடிவு செய்வோம். அண்ணாமலை தலைவர்களை  விமர்சனம் செய்தால் கடுமையான விளைவுகளை சந்தக்க நேரிடும்.”

இவ்வாறு காட்டமாக கூறினார்.