சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 9 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, கடலூர் புதுச்சேரியில் 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல் பஇன்று மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம் மற்றும் கடலூா் துறைமுகத்தில் புதன்கிழமை காலை 6.30 மணியளவில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. புதுச்சேரியில் இருந்து தற்போது நிவர் புயல் 320 கிலோ மீட்டர் தூரத்திலேயே மையம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அபாயத்தை குறிக்க கூடிய ஒரு எச்சரிக்கையாகும்.

இதனால் நிவர் புயல் இந்த துறைமுகத்தை கடுமையாக தாக்கும் அல்லது துறைமுகத்தை கடக்கும் போது இந்த பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். மரங்கள் முறிந்து விழும் மின்கம்பங்கள் சாய கூடிய அளவுக்கான மிகத் தீவிரமாக இருக்கும். புயல் பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு தீவிரமாக எடுத்து வருகின்றது. பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது பெரிய ஒரு அபாயகரமான எச்சரிக்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது, துறைமுகத்தை புயல் நெருங்கும் அல்லது அருகே கடந்து செல்லுமென எதிா்பாா்க்கப்படும் கடுமையான வானிலை முன்னறிவிப்பைக் குறிக்கும்.

மேலும், சென்னை எண்ணூர் காமராஜர் துறை முகத்தில் 9 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

அதிகபட்சமான 11 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் மோசமான வானிலை காரணமாக தகவல் தொடர்பு அற்று போனதாக அர்த்தம். புயல் காரணமாக  சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று 3வது நாளாக மழை தொடரகிறது.