2003ல் தன்னை பற்றி வந்த செய்தியும் ! தனக்கு நீதி மறுக்கப்பட்டதுமே !! ‘கைலாசா’ நாடு அமையக் காரணம் : நித்தியானந்தா

 

திருவண்ணாமலையில் பத்தோடு பதினொன்றாக ஆசிரமம் வைத்து சாமியாராக இருக்கவேண்டிய தன்னை,  கைலாசா என்று தனி நாடு அமைக்க காரணம் யாரென்று கூறினார் நித்தியானந்தா.

நித்தியானந்தாவும், கைலாசா நாடும், சமீப நாட்களாக இந்தியாவில் அனைவரும் அறிந்த பெயர்கள்.

பல் வேறு சர்ச்சையிலும், வழக்குகளிலும் சிக்கி இருக்கும் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்றே தெரியாத நிலையில்.  கைலாசா என்று ஒரு நாட்டை தோற்றுவித்து.

தன்  நாடு,  தன் மக்கள், தன் கொடி என்று ஏற்படுத்திக்கொண்டு தனிமையில் ஈகுவடோர் அருகில் ஒரு தீவில் இருக்கிறார் என்ற செய்தீ பரவியது. ஈகுவடோர் அரசு இதனை மறுத்துள்ளது.

தேடாத இடமெல்லாம் தேடினேன் என்று பல்வேறு தரப்பினர் இவரைத் தேடிக்கொண்டு இருக்க. எங்கு இருக்கிறார் என்றே தெரியாத நிலையில் நித்தியோ நித்தம் ஒரு வீடியோ என்று எடுத்து அனைத்து போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் வேலைகள் செய்து பதிவேற்றிக்கொண்டு  இருக்கிறார்.

அதுபோல், இரண்டு நாட்களுக்கு முன் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு காணொளியில்.  திருவண்ணாமலையில் சாதாரண சாமியாராக இருந்திருக்க வேண்டிய தன்னை  இவ்வளவு பெரிய ஆளாய் ஆக்கியது தனக்கு நிகழ்ந்த அவமானங்களும் ஊடகங்களுமே காரணம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் தான் இந்த அவமானங்களிலிருந்து மீண்டு இந்த நிலையை அடைய தனக்குப் பின்னால் இருந்து இயக்கும்  சக்தி யாரென்றும்  சொல்கிறார்.

நித்தியானந்தா வெளியுலகிற்கு வந்தால் மட்டுமே அனைத்தும்  வெளிச்சத்திற்கு வரும்.

அவரின் இந்த காணொளி உங்களுக்காக …