குன்னூர்: நீலகிரி அருகே முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பையொட்டி நீலகிரியில் இன்று வணிகர்கள் 12மணி நேரம் கடைகளை மூடி அஞ்சலி செலுத்துகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்ட்ன் ராணுவ முகாமுக்கு சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என அப்பகுதி மக்கள் அறிவித்து உள்ளனர். அதன்படி இன்று நீலகிரி மாவட்டத்தில் முழு கடைஅடைப்பு நடைபெற்று வருகிறது.