சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சென்னையில் இயக்கப்பட்டு வரும மெட்ரோ ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரயில் சேவை இதுவரை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கிக் கொண்டிருந்த நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அறிவித்துள்ளது

சென்னையில் பயணம் செய்வதற்கு ஏதுவாக சென்னை மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது இது சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. மேலும், பிக் அவர்சில்  சாலை வழியே பயணம் செய்வதை விட மெட்ரோ ரயிலில் செல்வதால் நேரமும் குறைவு மற்றும் கட்டணமும் குறைவு என்பதால் பல பயணிகள் தற்போது மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், து சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.