கோப்புப் படம்

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதல்,  கோவை, திருநெல்வேலி, நாகை, சென்னை உள்பட  பல இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

 

கோவை கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல இடங்களில் தேசிய புலனாய்வு அவ்வப்போது சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.  கார் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்காணித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  இன்றுஅதிகாலை முதல், சென்னை, கோவை, நாகை, தென்காசி உள்பட பல ,டங்களில்  பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 5 இடங்கள் உள்பட  கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்கடம், குனியமுத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் டவுன் காரிக்கான்தோப்பு பகுதியில் உள்ள மன்சூர் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம்  ஏர்வாடியிலும், தென்காசியின் அச்சன்புதூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் வடகரை என்ற இடத்தில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் காலையிலிருந்து திடீர் சோதனை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா என மொத்தம் 3 மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.