டில்லி

ந்தியாவில் சென்னை, டில்லி,பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்த ஆண்டு 5 ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் ஆகிறது.

இந்தியத் தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள ஆண்டு இறுதி அறிக்கையில்,

”தொலைத்தொடர்புத்துறையில் இந்த நேரடி அந்நிய முதலீடு 150 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு தொலைத்தொடர்புத்துறையால் சுமார் 224 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் 5ஜி பரிசோதனை படுகை திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இந்த பரிசோதனை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிவடையும்.

விரைவில் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விரைவில் தொடங்கப்படும் கடந்த செப்டம்பரில் 5ஜி அலைக்கற்றை ஏலம் மற்றும் அதற்கான அடிப்படை விலை, ஏலம் விடப்பட வேண்டிய அளவு, ஏல வழிமுறை ஆகியவற்றில் உள்ள பல்வேறு நடைமுறைகளுக்கு அனுமதி கேட்டு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்திடம் பரிந்துரை சமர்பித்துள்ளோம்.

இந்த அனுமதி கிடைத்ததும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் எனவே ஏர்டெல், ஜியோ, வோடோபோன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள் குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, புனே, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் 5ஜி சேவை வெள்ளோட்டத்திற்கான மையங்களைத் தயாராக வைத்திருப்பதால் இந்த நகரங்களில் 5ஜி சேவை நாட்டிலேயே முதலாவதாக வழங்கப்படும்.”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.