சென்னை

ந்தி மொழியில் அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டதற்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது.

இந்தியாவின் பொதுக் காப்பீடு நிறுவனங்களில் முதன்மையில் உள்ள நிறுவனங்களில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும்.   இது எல் ஐ சி போல மத்திய அரசின் ஒரு அங்கமான நிறுவனமாகும்.   சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில், “ அனைத்து மண்டல அலுவலகங்களிலிருந்து தலைமை அலுவலகத்துக்கு  அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும்.   மேலும் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பதில்களும் இந்தியிலேயே இருக்க வேண்டும்.  அதாவது அனைத்து அலுவலகப் பணிகளும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும்” என காணப்பட்டது. 

இந்த சுற்றறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  குறிப்பாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிடோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் டிவிட்டரில் 

“மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறோம். பிராந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் பணிச் சூழல் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது மகத்தான தேசத்தின் முழுவதும் உள்ள வளமான கலாச்சார மரபு மற்றும் மொழியியல் வகைகளுடன் நாங்கள் முழுமையாக இணைந்துள்ளோம் மற்றும் மரியாதையுடன் இருக்கிறோம்”

என்று தெரிவித்துள்ளது.