காரைக்குடி:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு விஸ்வரூப சிறப்பு தரிசனம் அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது;

சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமியின் பிரசங்கத்துடன் நடைபெற்றது.