சென்னை:
லைநகர் டெல்லியில் புத்தாண்டின் முதலான காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

 

நிலநடுக்கத்தால் காயம் அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. ” ஜன. 1, 2023 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 3.8 ஆகும். இது அதிகாலை 1 மணியளவில் உணரப்பட்டுள்ளது. ஹரியானாவின் ஜஜ்ஜார் நகரில் இருந்து வடக்கு-வடமேற்கு திசையில் 11 கி.மீ., நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்ற நவம்பர் 9, 12 ஆகிய தேதிகளில் டெல்லியிலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த நவ. 9 அன்று நள்ளிரவு 2 மணியளவில், டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.