சென்னை: முதன்முறையாக வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ள புதிய வாக்காளர்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம்  பேசியதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தபணிக்ள நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியலில்  இந்தாண்டு முதன்முதலாக  சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு இலவசமாக வீட்டிற்கே வண்ண வாக்காளர் அடையாளார் அட்டை வழங்கப்படும். தேர்தல் தொடர்பான சேவைகள் வாக்காளர்களுக்கு விரைவாக சென்றடையும் வகையில், விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த புதிய திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியவர், அதற்காக  அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எந்த வித இடர்பாடுகள் இன்றி வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்க எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார், இதை  ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதை உறுதிப்படுத்துவார்கள் என்றும் கூறினார்.