சென்னை: தாம்பரம், ஆவடியில் புதிய காவல்ஆணையர்கள், கடலோர காவல்படைக்கு 1000 இளம் மீனவர்கள், 1,132 பேருக்கு காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை உள்பட ஏராளமான அறிவிப்புகளை   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்  கொரோனா தொற்று காரணமாக, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கசட்டப்பேரவையில்,  ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள்  மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்றுடன் பேரவை நிகழ்வுகள் முடிவடைய உள்ளது. கடைசிநாளான இன்று  காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, காவல்துறைக்கு தலைமை வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை தொடர்பான ஏராளமான அறிவிப்புகளைவெளியிட்டு வருகிறார்.

அதன்படி, புதிய மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள  தாம்பரம் மற்றும் ஆவடியில் புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவர்கள், புதிய காவல்நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்படும், மாநிலத்தில் கடலோர பாதுகாப்பு குழு சிஐடிக்கு உதவ குறைந்தபட்சம் 1,000 இளம் மீனவர்கள் சேர்க்கப்படுவர்கள், காவல்துறையில் பணிக்காலத்தின்போது உயிரிழந்த காவல்களின் வாரிசுகளுக்கு வேலை உள்பட ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும்.

ஆவடி, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்..

தமிழகத்தில் புதிதாக 10 காவல்நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

குறிப்பாக காவலர்கள் பேருந்தில் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்படும். காவலர் முதல் ஆணையர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம்.

மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும்.

சைபர் குற்றத்தை தடுக்க மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.275 கோடி மதிப்பில் 896 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.

பொதுமக்கள் தங்கள் குறைகளை காணொலியில் காவல்நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்க செயலி உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி சம்பந்தப்பட்ட காவல் ஆணையர்/காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம் விடும் அதிகாரம் வழங்கப்படும்.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளையும் வல்லுநர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கி மோசடி, வேலை மோசடி, ஆவண மோசடி மற்றும் இணைய குற்றங்கள் ஆகியவற்றை புலன்விசாரணை செய்ய ரூ.1 கோடி செலவில் நிபுணர்களின் சேவை பயன்படுத்தப்படும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “அனைத்து இடங்களிலும் ஓர் அனைத்து மகளிர் காவல் நிலையம்” என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.