parliment-protest
டில்லி,
மோடி அரசுக்கு எதிராக டில்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்றதாக மத்திய அரசு அறிவித்ததை  தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் மக்கள் பணத்துக்கு அல்லாடி கொண்டிருக்கின்றனர். கடந்த 15 நாட்களாக அன்றாட தேவைக்கான பணம் கிடைக்காமல் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மக்களின் துயரமான நிலையை சுட்டிக்காட்டி, மத்திய அரசை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி கள் அனைத்து ஒன்று சேர்ந்து  இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
இதன் காரணமாக மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடந்த 5 நாட்களாக பாராளுமன்றத்தை நடைபெற விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளன.
மத்திய அரசின் நோட்டு செல்லாது என்ற நடவடிக்கைக்கு எதிராக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை காட்டி வருகின்றன.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் பாராளுமனற் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று நடத்தவிருக்கும் தர்ணா போராட்டம் குறித்து எதிர்க்கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
parliment-mudamkam
கூட்டத்துக்கு பின்பு, காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நிருபர்களிடம் பேசியதாவது,
“நாளை (இன்று) காலை 9.45 மணி அளவில் பராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரச்சினையில் நாங்கள் படிப்படியாக செல்வோம்” என்றார். மேலும் , “ஜனாதிபதியை சந்திப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எனினும் அவரை சந்திப்பதற்கான தேதி பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை” என்றார்.
இன்று காலை 9.45 மணி அளவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடினர். கையில் மத்திய அரசை கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்டுள்ள பதாதைகளை பிடித்துக்கொண்டு கோஷம் போட்டு தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அகில இந்தியா காங்கிரஸ் துணைத்தைலைவர் ராகுல்காந்தி, குலாம்நபி ஆசாத், திமுக கனிமொழி, அதிமுக நவநீதகிருஷ்ணன், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.
இன்று பகல் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு டில்லி வந்து சேர்ந்தார்.
இதுகுறித்து மம்தா கூறுகையில்,   “டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இனறு  பகல் 12.30 மணிக்கு நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறேன்
. இதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்று ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சாமானிய மக்கள் படும் கஷ்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். பார்லி., மற்றும் சட்ட சபை இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பது மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான மக்கள் புரட்சி ஆகும்.
இதிலிருந்து பா.ஜ., பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்