சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனையை கடுமையாக்கும் வகையிலான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரும், எடப்பாடி அரசின் கடைசி கூட்டத்தொடருமான, இந்த கூட்டத்திதொடரின் இறுதி நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இன்றைய கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

முன்னதாக, சட்டப்பேரவையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனையை கடுமையாக்கும் வகையிலான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்தார்.