பா.ரஞ்சித் என்றாலே சர்ச்சைதான். இவர் இயக்கிய முதல் படம் அட்டகத்தி. , மீஞ்சூர் கோபி என்ற இயக்குநர் தனது படத்துக்காக  உருவாக்கி வைத்திருந்த  பல காட்சிகளை தனது அட்டகத்தி படத்தில் பயன்படுத்திவிட்டார் என்று பா.ரஞ்சித் மீது புகார் எழுந்தது.

அதே போல, பா.ரஞ்சித் இயக்கய அடுத்த படமான மெட்ராஸ் படத்தின் கதையும் கோபியுடையது என்று சர்ச்சை எழுந்தது. இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார் கோபி.

இந்த நிலையில் கடும் போராட்டத்துக்குப் பிறகு கோபிக்கு, “அறம்” படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பான படம் என்று பரவலாக  பாராட்டு பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் பா.ரஞ்சித், “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி…# கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர்&படக்குழுவினர்க்கும் # தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்” என்று ட்விட்டியுள்ளார்.

இதற்கு பின்னூட்டமாக பா.ரஞ்சித்தை காய்ச்சி எடுத்துவிட்டார்கள் நெட்டிசன்கள்.

அவர்கள் கருத்துக்களைப் படித்துப்பாருங்களேன்…