நெட்டிசன் பதிவு

க்கரத்தாழ்வாருக்கும் நரசிம்மருக்கும் உள்ள சம்மந்தம் பற்றி விளக்கி உள்ள நெட்டிசன் மகேஷ் ராஜன் பதிவு இதோ :

கிரஹ தோஷங்களை நீக்கும் சுதர்சன நரசிம்ஹர்.!!!

ஏன் சக்ரதாழ்வார் பின்னால் யோக நரசிம்ஹர் உள்ளார்.பல வியாக்ஞானங்கள் உண்டு.


அதில் எனக்கு பலர் சொன்ன ஒன்று “இரண்யன் வயிறு இரும்மை போல் பல்லாயிர மடங்கு வலிமை பெற்றது.எந்த ஆயுத்தாலும் அதை கிழிக்க முடியாது.அதை கிழிக்கின்ற வன்மை சக்ராயுதத்திற்கு மட்டுமே உண்டு.எனவே’ஸ்ரீநரசிம்ம அவதாரத்தின் போது சுதர்சன ஆழ்வார் கூர்மையான கை நகங்களாக அமைந்து இரணியன் வயிற்றைக் கிழித்து வதம் செய்தார்.’
இந்த வதத்தில் பகவானின் அங்கமாகவே சக்ரத்தாழ்வார் செயல் பட்டதை நினைவுருத்தவே, சக்ரதாழ்வாரரும்,நரசிம்ஹமும் சேர்ந்தே இருப்பதாக காட்டப்படுகிறது.

சில படங்களில் சிலைகளில் நரசிம்ஹர் பின்னால் சக்ரதாழ்வார்(சுதர்சனம்) இருப்பது போலவும் உள்ளது.இதை “சுதர்சன நரசிம்ஹர்” என்று வழிபட்டு வருகின்றனர்.எல்லாவிதமான கிரஹ தோஷங்களும் இவரை வணங்கினால் தீரும் என நம்பிக்கையுடன்சொல்கின்றனர்