சென்னை,

நீட் மற்றும் மத்திய அரசின் பல்வேறு மேற்படிப்புகான  தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 100 இடங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாயின.

அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழக பாடத்திட்டத்தின்படி  படிக்கும் மாணவ-மாணவிகள் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள். இதன் காரணமாக அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இதன் காரணமாக தமிழக மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை   உள்ளது.

அதனால் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வை எதிர்கொள்ள வசதியாக பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி  தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டு அதற்கான முயற்சி யில் இறங்கியது. இதற்காக தமிழக்ததில் இருந்து திறமையான சில ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐதராபாத் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இவ்வாறு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மேலும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்கள்.

இதைதொடர்ந்து வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு தொடங்கப்படும் என்றும் அதற்கான ஆன்லைன் பதிவு நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனங்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து செங்கோட் டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல் கட்டமாக 100 மையங்களில் போட்டித் தேர்வு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தனியார் நிறுவனங்களு டன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு கொண்டு வரும் எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும் அதனை தமிழக மாணவர்கள் எளிதாக சந்திக்கலாம். இதற்காக முதல்-அமைச்சர் ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.