டில்லி,

மிழகத்திற்கு நீட் விலக்கிற்கான அவசர சட்டம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சட்டம் இன்று வெளியாகி அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அமைச்சர்கள் மத்திய அரசிடம் பலமுறை வலி யுறுத்தினர். முதல்வரும் பலமுறை டில்லி சென்று பிரதமரை வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து,  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு பெற வழிவகை செய்யும் அவசர சட்ட முன்வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் சமர்பித்தது.

இந்த சட்டத்திற்கு, விலக்கு அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து கூறியிருந்தார்.

இதையடுத்து, நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒரு வருட விலக்கு கொண்டு வரும் அவசர சட்ட முன்வடிவுக்கு மத்திய சட்ட அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழக கவர்னர் கவர்னர் ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமலுக்கு வரும்.

இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.