அரியலூர்:  நீட் தேர்வுக்கு தயாரான மாணவன், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வை எதிர்த்து, அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும், மத்தியஅரசு நீட் தேர்வை விடாபிடியாக நடத்தி வருகிறது.

நடப்பு ஆண்டிலும் வரும் 13ந்தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. கொரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான  அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த மாணவன் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண் டதாக கூறப்படுகிறது.

 நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், மாணவர் எடுத்தவிபரீத முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.