பழனி: தைப்பூசத்துக்கு பழனிமலைக்கு செல்வதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொண்டு வரவேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தேரோட்டம் நடைபெறும்.

தேரோட்டத்தை காண தமிழகமெங்கும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், தைபூசத்துக்கு பழனிமலைக்கு செல்வதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொண்டு வரவேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். வளாகத்தில் பஜனைக்குழு, பக்தி இசைக்குழுவை சேர்ந்தவர்களை பாடல்கள் பாட அனுமதிக்க கூடாது உள்ளிட்ட நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.