டெல்லி: நாடு முழுவதும் 5 ஆயிரம் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக  உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதி மன்றத்தில்,  எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய,  மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை கோர்ட்டு ஆலோசகராக சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

இந்த நிலையில், விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அதில், எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்கள் மீது சுமார் 5 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிறைய வழக்குகள் தீர்வு காணப்பட்டாலும், குற்றப்பின்னணி கொண்டவர்கள் தொடர்ந்து பதவிக்கு வருவதால், வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும்  இந்த 5 ஆயிரம் வழக்குகளில்,   1,899 வழக்குகள் 5 ஆண்டுகள் பழமையானவை.  இவற்றை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 163 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ-ல் கிரிமினல் வழக்கு உள்ளது! உச்சநீதிமன்றத்தில் தகவல்