டெல்லி: முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் முதுகலை மருத்துவ படிப்புகளான எம்.டி, எம்.எஸ். உள்பட பல்வேறு படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி, நடப்பாண்டு மார்ச் 12ந்தேதி முதுநிலை (PG) நீட் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தறபோது, முதுநிலை நீட் தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பான வழக்கை ஜனவரி 25ந்தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மனு குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.