கூட்டணி மாற்றத்திற்கு பிறகு மீண்டும் நாகாலாந்து மாநிலத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தக்கவைத்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 93 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தில் மாலை 5 மணி நிலவரப்படி,

தேசிய ஜனநாயக கூட்டணி: 01 தொகுதி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி: 00 தொகுதி

இவ்வாறு வெற்றி நிலவரங்கள் வெளியாகியுள்ளன.