திருவனந்தபுரம்

தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்கு எதிரான தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததால் அவர் மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பி பி முகமது பைசல் லட்சத்தீவு நாடாளுமன்றத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவஆவார்,  ,பைசல் சமீபத்தில் கூட்டுறவுச் சங்கம் சார்பில் மீன் விற்பனை முறைகேடு வழக்கில் அமலாக்கப்பிரிவு விசாரணையை எதிர்கொண்டார். அத்துடன் இவர், பி.சாலிக் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக அவர் மீம் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.

லட்சத்தீவு கவரத்தி முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம்  இந்த வழக்கை விசாரணை நடத்திய லட்சத்தீவு கவரத்தி முதன்மை நீதிமன்றம் முகமது பைசல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டதையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர். பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து முகமது பைசல், கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்தது. உயர்நீதிமன்றம் மேல் விசாரணைக்காக முகமது பைசலுக்கு கவரத்தி முதன்மை நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்ததையடுத்து அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர். பதவியை பெற்றுத் தொடர்ந்தார்.

கடந்த 3-ந்தேதி இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் கொலை முயற்சி வழக்கில் முகமது பைசல் எம்.பி. குற்றவாளி என்று தெரியவந்தது. எனவே உயர்நீதிமன்றம், முகமது பைசலுக்கு கவரத்தி முதன்மை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் மக்களவை செயலகம், முகமது பைசலை நாடாளுமன்ற உறுப்பினர். பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டதாக அறிவித்துள்ளது. முகமது பைசல் 2-வது முறையாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர். பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.