மராவதி

ந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவல் வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது.

இது குறித்த வழக்கில் சிஐடி காவல்துறை சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.சுதாகர் ரெட்டியும், சந்திரபாபு நாயுடு சார்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரமோத் துபேயும் வாதிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவின் காவலை அக்டோபர் 19-ந்தேதி வரை 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல்துறை ஐந்து நாட்கள் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளனர்.  இந்நிலையில் நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு மற்றும் அவரைக் காவலில் வைக்கக் கோரிய ஆந்திர மாநில சிஐடி காவல்துறையினர் மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்துள்ளது.