தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஷோபனா.

தற்போது முழுநேர பரதக்கலை ஆசிரியராக மாறிவிட்டார் ஷோபனா . இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் பேத்தி. இவர் பரத நாட்டியத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். திருமணம் செய்துகொள்ளாமலேயே பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன் அனூப் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் ஷோபனா நடிக்கிறாராம்.

இந்தப் படத்தில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்கிறார். 2005ல் வெளியான ‘மகளுக்கு’ என்ற படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்த பிறகு 15 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இணைகிறார்கள்.