நயன்தாராவின் மலையாளப்படம் ’விஷு’’ நாளில் ரிலீஸ்.

நயன்தாரா தனது தாய் மொழியான மலையாளத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்துள்ள படம் – நிழல்.

கொரோனா குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தொடங்கப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்துள்ளது.

எடிட்டர் அப்பு பட்டாத்திரி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் அவதாரம் எடுத்துள்ளார்.

திரில்லர் கதையான நிழலில் நயன்தாரா ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார்.

அவர் இந்த படத்தில் மாஜிஸ்திரேட் வேடத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா கேரக்டர் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.

ஆனால் கேரளாவில், தியேட்டர்களில்  இரண்டாவது  காட்சிக்கு இன்னும் அனுமதிக்கப்பட வில்லை..

இரண்டாவது காட்சிக்கு தான் கேரள மக்கள் அதிகமாக வருவார்கள்.

சித்திரை விஷு தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு தினமாக  கொண்டாடப்படுவது போல் கேரளாவிலும் விஷு ரொம்ப விஷேசம்.

விஷு தினத்தன்று – அதாவது ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நிழலைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.

-பா.பாரதி.