நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜூன் மாதம் 9 ம் தேதி திருமணமான இவர்களுக்கு குழந்தை பிறந்திருப்பதாக வெளியான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ‘லிவிங் டு கெதரில்’ இருந்து வந்த நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் திருமணத்துக்குப் பின் தேனிலவுக்காக வெளிநாடு சென்றார்கள்.

பின்னர் மீண்டும் பட வேலைகளில் கவனம் செலுத்திய இருவரும் கடந்த சில நாட்களாக ஸ்பெயின் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக வெளியான செய்தி அவரது ரசிகர்களிடையே ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.