டில்லி,

ற்போதுள்ள சூழ்நிலையில் தமிழக முதல்வர் மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏவான நட்ராஜ் ஐபிஎஸ்-ஐ முதல்வராக அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கருத்து  தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்துழ அவர் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேர்மையான காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், எம்எல்ஏவாக சிறப்பாக செயல்பட்டு வருபவருமான நட்ராஜை முதலமைச்சராக்குவது குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சசிகலாவுக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கோ ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையாகச் செயல்படும் நட்ராஜை முதல்வராக்கினால், அதை இருதரப்பினருமே ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் கட்ஜு, தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை  அதிமுக எம்எல்ஏக்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மைலாப்பூர் தொகுதி நட்ராஜ் ஐபிஎஸ் சென்னை கமிஷனராக பதவி வகித்தவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றவர்.  இதன் காரணமாக அவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவர் தலைவராக இருந்தபோது எந்தவித ஊழல் இன்றி டிஎன்பிஎஸ்சி மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கி பலருக்கு எந்தவித செலவின்றி பணி நியமனம்  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.