சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும்  சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய பார்வை இதழ் ஆசிரியரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவருமான ம.நடராஜன்  ஏற்கனவே உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் குளோபல் தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடலில் கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகள் செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

ஆனால், அவருக்கு பொருத்தமான கல்லீரல் இதுவரை கிடைக்காததால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து உள்ளது.

இதன் காரணமாக அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.