சென்னை கே.கே. நகரில் இருக்கும் பி.எஸ்.பி.பி. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த விஷால் ட்விட்டரில் கொந்தளித்தார்.

விஷாலின் ட்வீட்டை பார்த்த நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமோ, சினிமாவுக்கு வரும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பல ஹீரோயின்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். நீங்களும், உங்களின் நண்பர்களும் பெண்களை யூஸ் செய்துவிட்டு, தூக்கி எறிந்துவிடுவீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதற்கு நடிகரும் , விஷாலின் நண்பருமான நந்தா : எந்த ஹீரோயின் ஓடிப் போனார்? உங்களால் நிரூபிக்க முடியுமா?. எந்த ஹீரோயினுக்காவது விஷால் தொல்லை கொடுத்தற்கான ஆதாரம் இருக்கிறதா? அவருக்கு எதிராக ஏதாவது புகார் அளிக்கப்பட்டதா என்று கேட்டார்.

அதற்கு காயத்ரி ரகுராமோ, அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்க நான் விரும்பவில்லை. முடிந்தது முடிந்துவிட்டது. அது எல்லாம் என் புகார்கள் இல்லை. ஏற்கனவே உள்ளவை என்றார்.