சென்னை

நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இன்று பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதன்படி நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக மயிலை ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விரைவில் மண்டல வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி அடுத்தடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.