உண்மை சம்பவங்களை கதையாக்கி உருவாக்கப்பட்டுள்ள படம் “வைல்ட் டாக்”

நாகார்ஜுனா, கதாநாயகனாக நடித்துள்ளார்.

பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதியை, தேசிய விசாரணை முகமை என்கிற உயர் மட்ட போலீசார் வேட்டையாட கிளம்புகிறார்கள்.

அந்த படையின் உதவி கமிஷனராக இருக்கும் விஜய் வர்மா, தீவிரவாதியை பிடித்து வேட்டையாடுவது – மூலக்கதை.

விஜய் வர்மா, கேரக்டரில் நாகார்ஜுனா நடித்துள்ளார்.

அகிஷோர் சல்மான் இயக்கியுள்ள இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நாகார்ஜுனா “ஒரே மாதிரி வேடத்தில் நடிப்பது போரடிக்கும் சமாச்சாரம்.

புதிய இயக்குநர்கள் படங்களில் நடிக்கவே நான் அதிக ஆர்வம் காட்டுவேன். புதிய டைரக்டர்கள் படத்தில் நடித்துத்தான், இந்த உயரத்தை எட்டி பிடித்தேன்.

இந்த படத்தில் சண்டை காட்சிகள் ரொம்பவும் ஸ்பெஷல்.குணாலியில் படமாக்கப்பட்ட ஒரு சண்டை காட்சி பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும்” என்றார் நாகார்ஜுனா.

– பா. பாரதி