சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் சமந்தா – நாக சைத்தன்யா இருவரும். அதோடு நாக சைத்தன்யா குடும்பத்தினர் ரூ.200 கோடி ஜீவனாம்சமாக வழங்க முன்வந்த நிலையில் அதை சமந்தா மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு நாக சைதன்யா ட்விட்டர் பக்கமே வரவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் ட்வீட் செய்திருக்கிறார். தெலுங்கு பட பாடலை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நாக சைதன்யா.

சமந்தாவை பிரிவது என்று முடிவு செய்ததுமே அவர் வீட்டை காலி செய்துவிட்டு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் பங்களா வாங்கியிருக்கிறார் நாக சைதன்யா என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக நாக சைதன்யாவும், சமந்தாவும் சேர்ந்து பங்களா வாங்கி வசித்து வந்தார்கள். அந்த பங்களாவில் தான் தற்போது சமந்தா தங்கியிருக்கிறார். ரூ. 6 கோடி மதிப்புள்ள அந்த பங்களாவை சமந்தாவுக்கு கொடுத்துவிட்டாராம் நாக சைதன்யா.