நடிகர் சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.

இந்தநிலையில், சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடந்தது. இதில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், பொன்வண்ணன் முதலான பலரும் கலந்துகொண்டனர்.

நாங்கள் பொறுப்பேற்றால், என்னென்ன செய்வோம் என்று சொன்னோமோ, அவற்றையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். அதேபோல், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் கட்டடப் பணிகள் முடிவுபெறும். ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும் தேதி, இடம் குறித்த விவரங்களை அவரே அறிவிப்பார் என நாசரும் பொன்வண்ணனும் கூறினர்.

இந்தத் தேர்தலில் விஷால் போட்டியிடுவாரா என்பது குறித்து இப்போது பதில் சொல்ல இயலாது எனவும் தெரிவித்தனர்.

நடிகர்கள் விஷால், கார்த்தி ஆகியோர் அதில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.