காரைக்கால்:
காரைக்காலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனைவி மர்மான முறையில் உயிரிழந்தார்.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் காந்தி சாலையை சேர்ந்தவர் வி.எம்.சி.வி. கணபதி. இவர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அதிமுக புதுச்சேரி முன்னாள் மாநில செயலாளரும் ஆவார். இவரது மனைவி அருமைகண்ணு (எ) அனிதா (61). இருவரும் திருமலைராயன்பட்டினத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அருமைகண்ணு மாயமானார். திருமலைராஜன் ஆற்றங்கரையோரத்தில் அவர் அணிந்திருந்த காலணிகள் கிடந்த நிலையில், தீயணைப்புத் துறையினர், மீனவர்கள் உதவியோடு தேடும் பணி நடந்தது. இந்நிலையில், நேற்று காலை திருமலைராஜன் ஆற்றின் கரையோரத்தில் முட்புதரில் சிக்கியிருந்த அருமைக்கண்ணுவின் உடல் மீட்கப்பட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அருமைகண்ணு மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.