சென்னை:  மெட்ரோ ரயில் லிமிடெட் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணண் சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தை இடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட சுரங்கப்பாதைக்காக இடிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது மொத்தம்  116.1 கி.மீ.தொலைவுக்கு இந்த  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறத. இதற்கான பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதில், ஒரு பாதை, மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடம் (45.4 கி.மீ.). இந்த வழிப்பாதையில்,  26.7 கி.மீ. சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் மேம்பாலம், மற்றும் அடையாறு மேம்பாலங்கள் உள்ளன.  இந்த வழியாக செல்லும் சுரங்க ரயில் பாதை, பசுமை வழிசாலையில் இருந்து அடையாறு ஆற்றைக் கடந்து, அடையாறுபணிமனை நோக்கி  அமைக்கப்படவுள்ளது.

இதற்காக,  மயிலாப்பூர்  ராயப்பேட்டை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்படவுள்ளது.   அதுபோல, சென்னை அடையாறு சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளது. ராதாகிருஷ்ணன் சாலை – ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் 50 சதவீதம் அளவுக்கு ஒரு பகுதிமட்டும் இடிக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள்  டிசம்பரில் தொடங்ங்க உள்ளது. .அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதியை அடுத்த ஆண்டு செப்டம்பரில் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ பணி முடிவடைந்தவுடன், அடையாறு மேம்பாலம் 2027-ம் ஆண்டு அக்டோபரிலும், ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் 2028 மார்ச் மாதத்திலும் மீண்டும் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் இடிக்கப்பட்டதும், அதற்கு   பதிலாக இரண்டு வழித்தடங்களை இணைக்கும் வகையில்  புதிய பாலம் அருகில் கட்டப்பட்டு அதன் மூலம் வாகன போக்குவரத்து மாற்றப்படும்.  இந்த பாலத்தின் ஒரு வழி, திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் வகையில் இருக்கும். இதற்கு கீழே  35 மீ ஆழத்தில் ஆழமான சுரங்கங்களைக் கொண்டிருக்கும். இங்கு மெட்ரோ ரயில் மற்றும்  திருமயிலை ரயில் நிலையம் இணைக்கப்படும். தற்போதுள்ள எம்ஆர்டிஎஸ் நிலையம் மற்றும் லஸ் கார்னரில் உள்ள எம்டிசி பேருந்து நிறுத்தத்தை இணைப்பதுடன், ஏராளமான மக்களை ஈர்க்கும் மைல்கல் கபாலீஸ்வரர் கோயிலையும் இந்த நிலையம் இணைக்கும்.

இதற்கான பணிகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. திருமயிலை நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகள் கட்டுவது சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், . மந்தைவெளி மற்றும் திருமயிலை இடையே அமைக்கப்படும் இரட்டை சுரங்கப்பாதையின் அஸ்திவார தூண்கள் வருவதால் பக்கிங்காம் கால்வாயின் மேல் உள்ள மதகு பாலத்தை இடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறி அதிகாரிகள், அதற்காக  சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது  என தெரிவித்துள்ளனர்.

சுரங்க பணிகள் மேற்கொள்வதற்காக, மந்தவெளி, மயிலாப்பூர் மற்றும் லஸ் சந்திப்புக்கு இடையே உள்ள முக்கிய சாலை இணைப்பாக கல்வர்ட் பாலம் இடிக்கப்பட உள்ளது. மேலும், சுரங்கப்பாதைகளை தோண்டும், “டன்னல் போரிங் மெஷின் மூலம்  கான்கீரிட்டை மட்டுமே வெட்ட முடியும், இரும்பு தூண்களை வெட்ட முடியாது. அதனால், பங்கிங்காம் கால்வாயில் உள்ள தூண்களை அகற்றுவது கடினம். வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டால் ஆன  மயிலாப்பூர் பகுதியில் உள்ள கல்வர்ட் பாலத்தின் அடித்தள தூண்களை அகற்றுவது சவாலான செயல் என்றாலும்,  அதை அகற்ற வேண்டியது அவசியம் என்றும் இதற்காக  மாற்று பாலத்தை எங்கு கட்டுவது என்பது மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை முடிவு செய்வோம் என்றவர், அதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய  சிஎம்ஆர்எல் செய்தித் தொடர்பாளர் எல்.கிரிராஜன், திருமயிலை மெட்ரோ கட்டுமானப் பணிக்கான தடுப்பணைகள் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்றும், மின் கேபிள்கள், நீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் போன்ற நிலத்தடி பயன்பாடுகளை மாற்றுப்பாதையில் செப்டம்பரில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.  “நிலையத்தின் வெளிப்புறச் சுவர்கள் கட்டும் பணி 2023 நவம்பரில் தொடங்கும் மற்றும் 2024 அக்டோபரில் சுரங்கப்பாதை தொடங்கும். ஆறு டிபிஎம்கள் மீட்டெடுக்கப்பட்டு இரண்டு டிபிஎம்கள் திருமயிலையில் தொடங்கப்படும்” என்று அவர் கூறினார்.

திருமயிலை நிலையம் லஸ் சந்திப்பின் கீழ் கட்டப்படும். இந்த நிலையம் மாதவரத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான நடைபாதை-3 மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து நடைபாதை-4 கலங்கரை விளக்கத்தை இணைக்கும் ஒரு பரிமாற்றமாக இருக்கும்.

இந்த நிலையத்தின் கட்டுமானம் ஒரு பொறியியல் சவாலாக இருக்கும், ஏனெனில் இது பாறை மண்ணை வெட்டுகிறது. இது காரிடார்-3ல் இரண்டு அடுக்கப்பட்ட சுரங்கங்களை யும், தாழ்வாரம்-4ல் இணையான சுரங்கப்பாதையையும் கொண்டிருக்கும். சாலையின் குறுகிய அகலம் காரணமாக ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும் வகையிலான அடுக்கப்பட்ட சுரங்கப்பாதைகள்  அமைக்க திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் 2028 ஆம் ஆண்டில் முடிவடைந்து, பொதுமக்களுக்காக திறக்க  திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.