சென்னை:

யாருக்கு ஆதரவு என்பதை தேர்தல் நேரத்தில் தெரிவிப்பேன் – என மு.க அழகிரி கூறியுள்ளார்.


கருணாநிதி இறப்பதற்கு முன் திமுக தலைமைக்கு எதிரான கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் மு.க.அழகிரி.
ஸ்டாலினை தலைவராக்குவதற்கு அப்போது கடும் எதிர்ப்புகளை காட்டிக் கொண்டிருந்தார்.

தென் மாவட்டங்களில் இவருக்கு திமுகவில் இன்னும் செல்வாக்கு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

எனினும், கருணாநிதி இறந்தபின் எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறார்.

இந்நிலையில், சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தேர்தல் அறிவித்ததும் எனது ஆதரவு குறித்து தெரிவிப்பேன் என்று பதில் அளித்தார்.
செய்தியாளர்களின் மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர் சென்றார்.