சென்னை: இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்னிமா பாக்கியராஜ் ஆகியோருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என அவர்களது மகன் சாந்தனு தெரிவித்துள்ளார்.

கொரோனா 2வது அலை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் மற்றும் நடிகருமான கே. பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவியான பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அவரது மகன் மற்றும் நடிகருமான சாந்தனு பாக்கியராஜ் தனது டிவீட்டர் பக்கத்தில்,  இதில் ” என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம்.

கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.