சென்னை: தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வரே உதவுங்கள் என சினிமா இயக்குநர் சீனு ராமசாமி  விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய விஜய்சேதுபதியின் 800 பட விவகாரம் தொடர்பாக, விஜய்சேதுபதிக்கு எதிராக சீனுராமசாமி கருத்து தெரிவித்துவந்த நிலையில், அவலது அலறல் விட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமா இயக்குனராக இருப்பவர் சீனுராமசாமி. இவர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர். அவரை  வைத்து,  தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்கள் படங்களை எடுத்துள்ளார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் என்ற படத்தில் மீண்டும்  விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபகாலமாக தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய, இலங்கை பவுலர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,  முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.  முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் மட்டும் மிரட்டல்கள் தொடர்ந்து. இதையடுத்து, அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகினார்.
இந்த பட விவகாரத்தில், விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் சீனு ராமசாமி . இவர்தான் திரையுலகில் விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர்.
இந்த நிலையில் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும்.அவசரம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
800 படம் விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.