சென்னை: ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம், ) இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது. எதிர்க்கட்சி தலைவர் இப்போது மத்தியஅரசுக்கு எதிராக குரல் கொடுப்பது மகிழ்ச்சி என  சட்டப்பேரவையில்  ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்  கூறினார்.

“அரசு தயாரிக்கும் உரையை அப்படியே வாசிப்பது ஆளுநரின் கடமை. ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைக்கு சட்டமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுநரின் செயல் மக்களை அலட்சியப்படுத்தும் அவமானப்படுத்தும் செயல்” என கண்டனம் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

எல்லாருக்கும் எல்லாம் என்னும் விதையை விதைத்தவர் பெரியார். அதனை ஆட்சியில் செய்து காட்டியவர் கருணாநிதி.

இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.

தமிழ்நாட்டு மக்களுக்காக ஒவ்வொரு நாளும் சிந்தித்து செயல்படுகிறேன்.

அரசின் உரையை அப்படியே வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை. கவர்னர் அவரது அரசியலுக்காக சட்டசபையை பயன்படுத்திக்கொண்டார்.

திராவிட மாடல் வழித்தடத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.

சிறு பிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்துவிட மாட்டோம்.

புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்.

எவர்வரினும் நில்லேன். அஞ்சேன் என்பதுதான் இவர்களுக்கு என் பதில்.

கலைஞர் இன்று ஆட்சி செய்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே நான் ஆட்சி நடத்தி வருகிறேன்.

தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களில், தமிழகம் 3-வது இடத்தில் உள்ளோம்.

ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இந்திய பொருளாதாரத்துக்கு 9 சதவீத பங்கை தருகிறது, தமிழ்நாட்டின் பொருளாதார வளம். இது திராவிட மாடலின் சாதனை.

திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டால் நேரம் போதாது.

நாள்காட்டியின் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

முதலமைச்சர் பொறுப்புக்கு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை அனைத்தும் சாதனை, முன்னேற்ற மாதங்கள்.]

அனைத்துத்துறைகளிலும் தமிழ்நாடு வளர்ந்து வருவதை பார்த்து நம் எதிரிகளுக்கு பொறாமையும், கோபமும் வருகிறது;

நான் முதல்வன் திட்டத்தில், 2 ஆண்டுகளில் 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்;

தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை;

ஜிஎஸ்டி வரி முறையால் தமிழ்நாட்டிற்கு ரூ.20,000 கோடி இழப்பு;

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது, பேசாத எதிர்க்கட்சித்தலைவர் இப்போது குரல் கொடுப்பது மகிழ்ச்சி”

ஜி.டி.பி.யில் இந்தியா 2ம் இடம்.

மின்னணு உற்பத்தியில் 6-வது இடம்.

செஸ் விளையாட்டு, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மூலம் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

காலை உணவு திட்டத்தை தினத்தந்தி நாளிதழ் “அன்று காமராஜர், இன்று ஸ்டாலின்” என பாராட்டியது.

ஜி.எஸ்.டி. வரி முறையால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு

மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்துக்கு மத்திய அரசு நிதி தரவில்லை.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொழில் திட்டங்களை தருவதில்லை.k

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சோக கதையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இவ்வாறு கூறினார்.